தீபாவளி
அப்போது
தீபாவளியென்று ஒன்று இருந்தது
நரகாசுரரை
கண்ணன் கொன்றானென்பதெல்லாம்
தெரியாது அப்போது
தெரிந்ததெல்லாம்
புத்தாடையும் பட்டாசும்தான்
பலகாரத்தின்மீதெல்லாம்
பெரிதாக ஒன்றும் ஆசை இருந்ததில்லை
ஒரு மாதத்திற்கு முன்பாகவே
தொடங்கிவிடும் தீபாவளி
அப்போது
பேச்சும் நினைப்புமெல்லாம்
புத்தாடை பட்டாசு பற்றியே
எப்போதுமிருக்கும்
எப்போது வரும் தீபாவளி
எப்போது உடுத்தலாம் புத்தாடையென
எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனது
புத்தாடை உடுத்தி எல்லோரிடமும் காட்டி
சந்தோசப்படும்
பட்டாசு வாங்கிவர
தினந்தோறும் சொல்வதுண்டு
அப்பாவிடம்
எங்கு வெடிச்சத்தம் கேட்டாலும்
ஓடிச்சென்று வேடிக்கை பார்ப்பதுண்டு
பட்டாசு வைக்க பயந்த காலமது
மத்தாப்பு கண்டால் குதூகலிக்கும்
புஸ்வாணம் கண்டால் புல்லரிக்கும்
இப்போதும்
தீபாவளியென்று ஒன்று இருக்கிறது
எல்லோரோடும் சேர்ந்திருக்கும்
விடுமுறையோடும்
அம்மா செய்துதரும் பலகாரத்தோடும்
அப்போது
தீபாவளியென்று ஒன்று இருந்தது
நரகாசுரரை
கண்ணன் கொன்றானென்பதெல்லாம்
தெரியாது அப்போது
தெரிந்ததெல்லாம்
புத்தாடையும் பட்டாசும்தான்
பலகாரத்தின்மீதெல்லாம்
பெரிதாக ஒன்றும் ஆசை இருந்ததில்லை
ஒரு மாதத்திற்கு முன்பாகவே
தொடங்கிவிடும் தீபாவளி
அப்போது
பேச்சும் நினைப்புமெல்லாம்
புத்தாடை பட்டாசு பற்றியே
எப்போதுமிருக்கும்
எப்போது வரும் தீபாவளி
எப்போது உடுத்தலாம் புத்தாடையென
எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனது
புத்தாடை உடுத்தி எல்லோரிடமும் காட்டி
சந்தோசப்படும்
பட்டாசு வாங்கிவர
தினந்தோறும் சொல்வதுண்டு
அப்பாவிடம்
எங்கு வெடிச்சத்தம் கேட்டாலும்
ஓடிச்சென்று வேடிக்கை பார்ப்பதுண்டு
பட்டாசு வைக்க பயந்த காலமது
மத்தாப்பு கண்டால் குதூகலிக்கும்
புஸ்வாணம் கண்டால் புல்லரிக்கும்
இப்போதும்
தீபாவளியென்று ஒன்று இருக்கிறது
எல்லோரோடும் சேர்ந்திருக்கும்
விடுமுறையோடும்
அம்மா செய்துதரும் பலகாரத்தோடும்
No comments:
Post a Comment