Monday 9 October 2017

செல்போன்கள்

பேசுவதற்கென வந்த செல்போன்கள்
பார்ப்பதற்கு
கேட்பதற்கு
படிப்பதற்கு
எழுதுவதற்கு
என்றாகிவிட்டது.

என்ன சொன்னாலும்
திருந்துவதாக இல்லை
செல்போனில் பேசிக்கொண்டே
வாகனம் ஓட்டுபவர்கள்.

பேருந்துகளில் 
செல்போனில்
பாட்டு கேட்பவர்களில்
பல பேர்
தூங்கிக்கொண்டே வருகிறார்களே
ஒருவேளை 
தாலாட்டு கேட்பார்களோ.

சிரங்கு பிடித்தவன்
கைகளைப் போலவே
ஸ்மார்ட் போன் பிடித்தவன்
கைகளும் சும்மாவே இருப்பதில்லை.

எப்படித்தான் முடிகிறதோ
காதெல்லாம் சூடாக
கால நேரம் பார்க்காமல்
செல் போனில் கதை பேச.

எப்பேர்ப்பட்டவர்களையும்
தலை குனிய வைத்து விடுகின்றன
இந்த செல் போன்கள்.

அம்மாக்களால் கூட
நிறுத்த முடியாத
குழந்தைகளின் அழுகையை
சட்டென்று நிறுத்தி விடுகின்றன
செல் போன்கள்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...