பேசுவதற்கென வந்த செல்போன்கள்
பார்ப்பதற்கு
கேட்பதற்கு
படிப்பதற்கு
எழுதுவதற்கு
என்றாகிவிட்டது.
என்ன சொன்னாலும்
திருந்துவதாக இல்லை
செல்போனில் பேசிக்கொண்டே
வாகனம் ஓட்டுபவர்கள்.
பேருந்துகளில்
செல்போனில்
பாட்டு கேட்பவர்களில்
பல பேர்
தூங்கிக்கொண்டே வருகிறார்களே
ஒருவேளை
தாலாட்டு கேட்பார்களோ.
சிரங்கு பிடித்தவன்
கைகளைப் போலவே
ஸ்மார்ட் போன் பிடித்தவன்
கைகளும் சும்மாவே இருப்பதில்லை.
எப்படித்தான் முடிகிறதோ
காதெல்லாம் சூடாக
கால நேரம் பார்க்காமல்
செல் போனில் கதை பேச.
எப்பேர்ப்பட்டவர்களையும்
தலை குனிய வைத்து விடுகின்றன
இந்த செல் போன்கள்.
அம்மாக்களால் கூட
நிறுத்த முடியாத
குழந்தைகளின் அழுகையை
சட்டென்று நிறுத்தி விடுகின்றன
செல் போன்கள்.
பார்ப்பதற்கு
கேட்பதற்கு
படிப்பதற்கு
எழுதுவதற்கு
என்றாகிவிட்டது.
என்ன சொன்னாலும்
திருந்துவதாக இல்லை
செல்போனில் பேசிக்கொண்டே
வாகனம் ஓட்டுபவர்கள்.
பேருந்துகளில்
செல்போனில்
பாட்டு கேட்பவர்களில்
பல பேர்
தூங்கிக்கொண்டே வருகிறார்களே
ஒருவேளை
தாலாட்டு கேட்பார்களோ.
சிரங்கு பிடித்தவன்
கைகளைப் போலவே
ஸ்மார்ட் போன் பிடித்தவன்
கைகளும் சும்மாவே இருப்பதில்லை.
எப்படித்தான் முடிகிறதோ
காதெல்லாம் சூடாக
கால நேரம் பார்க்காமல்
செல் போனில் கதை பேச.
எப்பேர்ப்பட்டவர்களையும்
தலை குனிய வைத்து விடுகின்றன
இந்த செல் போன்கள்.
அம்மாக்களால் கூட
நிறுத்த முடியாத
குழந்தைகளின் அழுகையை
சட்டென்று நிறுத்தி விடுகின்றன
செல் போன்கள்.
No comments:
Post a Comment