மெத்தப்படித்த மேதாவிகளுக்கு ஒண்ணும் தெரியாத சின்னப்பய எழுதுறது,
நா இலக்கணம் இலக்கியம்ல படிச்சவன் கிடையாது, எம் புள்ளைய தமிழ் வழி பள்ளியில படிக்க வைக்கிற சாதாரண தமிழ் பய.
ஒருத்தன் சொல்றான் பெரியார் தெலுங்கன்னு, இன்னொருத்தன் சொல்றான் கன்னடன்னு அப்பறம் இன்னொரு பய சொல்றான் அவரு தெலுங்கனும் இல்ல கன்னடனும் இல்ல நெல்சன் மண்டேலாவோட சித்தப்பா மகன்னு .
அவரு யாரா வேணா இருந்துட்டு போகட்டும் , அவரு எனக்கும் எம் புள்ளைகளுக்கும் இந்த சமுதாயத்துக்கும் என்ன பண்ணாருங்கிறது தான் எனக்கு முக்கியம்.
நா தண்ணி அடிக்கிறது இல்ல, சிகரெட் புடிக்குறது இல்ல, பொம்பள பொறுக்கியும் இல்ல. எனக்கு தனி மனித ஒழுக்கத்த சொல்லிக்கொடுத்ததே அந்த கிழவன் தான்.
நானும் ஏதோ ஓரளவுக்கு படிச்சு வேலைக்கு போயி குடும்பத்த காப்பதுறேன்னா அதுக்கும் அந்த கெழட்டுபய தான் காரணம் அவரு போராடி வாங்கித் தந்த இடஒதுக்கீட்டால படிச்ச பய தான் நா.
எனக்கு மனித நேயத்த சொல்லி தந்தவரும், ஒன்ன விட ஒசந்தவனும் இல்ல தாழ்ந்தவனும் இல்லன்னு சொல்லி தந்தவரும் எல்லாரும் சமம்னு சொன்னவரும் அவருதான்.
பெரிய பெரிய அறிவாளின்னு சொல்லிக்கிறவனல்லாம் முட்டாபயல இருக்கும் போது என்ன மாதிரி சாதாரணமாணவங்களும் கொஞ்சம் அறிவோடயும் தன்மானத்தோடயும் வாழ்றோம்னா அதுக்கும் அந்த கிழவன்தான் காரணம்.
சாகறவரைக்கும் எனக்கும் என் சமுதாயத்துக்கும் உழைச்சவர் அவர்தான்.
அவரு தமிழனுக்காக ஒண்ணுமே புடுங்கலேன்னா நீங்க இதுவரை புடுங்குணது என்ன,இனிமே புடுங்கப்போறது என்ன அதையாவது சொல்லுங்க நாங்களும் உங்களோட சேர்ந்து நீங்க சொல்றத புடுங்குறோம்.
இப்படிக்கு,
ஒண்ணும் தெரியாத சின்ன பய
க.ம.மணிவண்ணன்
நா இலக்கணம் இலக்கியம்ல படிச்சவன் கிடையாது, எம் புள்ளைய தமிழ் வழி பள்ளியில படிக்க வைக்கிற சாதாரண தமிழ் பய.
ஒருத்தன் சொல்றான் பெரியார் தெலுங்கன்னு, இன்னொருத்தன் சொல்றான் கன்னடன்னு அப்பறம் இன்னொரு பய சொல்றான் அவரு தெலுங்கனும் இல்ல கன்னடனும் இல்ல நெல்சன் மண்டேலாவோட சித்தப்பா மகன்னு .
அவரு யாரா வேணா இருந்துட்டு போகட்டும் , அவரு எனக்கும் எம் புள்ளைகளுக்கும் இந்த சமுதாயத்துக்கும் என்ன பண்ணாருங்கிறது தான் எனக்கு முக்கியம்.
நா தண்ணி அடிக்கிறது இல்ல, சிகரெட் புடிக்குறது இல்ல, பொம்பள பொறுக்கியும் இல்ல. எனக்கு தனி மனித ஒழுக்கத்த சொல்லிக்கொடுத்ததே அந்த கிழவன் தான்.
நானும் ஏதோ ஓரளவுக்கு படிச்சு வேலைக்கு போயி குடும்பத்த காப்பதுறேன்னா அதுக்கும் அந்த கெழட்டுபய தான் காரணம் அவரு போராடி வாங்கித் தந்த இடஒதுக்கீட்டால படிச்ச பய தான் நா.
எனக்கு மனித நேயத்த சொல்லி தந்தவரும், ஒன்ன விட ஒசந்தவனும் இல்ல தாழ்ந்தவனும் இல்லன்னு சொல்லி தந்தவரும் எல்லாரும் சமம்னு சொன்னவரும் அவருதான்.
பெரிய பெரிய அறிவாளின்னு சொல்லிக்கிறவனல்லாம் முட்டாபயல இருக்கும் போது என்ன மாதிரி சாதாரணமாணவங்களும் கொஞ்சம் அறிவோடயும் தன்மானத்தோடயும் வாழ்றோம்னா அதுக்கும் அந்த கிழவன்தான் காரணம்.
சாகறவரைக்கும் எனக்கும் என் சமுதாயத்துக்கும் உழைச்சவர் அவர்தான்.
அவரு தமிழனுக்காக ஒண்ணுமே புடுங்கலேன்னா நீங்க இதுவரை புடுங்குணது என்ன,இனிமே புடுங்கப்போறது என்ன அதையாவது சொல்லுங்க நாங்களும் உங்களோட சேர்ந்து நீங்க சொல்றத புடுங்குறோம்.
இப்படிக்கு,
ஒண்ணும் தெரியாத சின்ன பய
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment