Monday 9 October 2017

தமிழ்

தமிழின் பெருமையை பக்கம் பக்கமாய் 
பேசி வந்த நான்,

தமிழ் எனது மூச்சு, தமிழ் எனது உயிர் என்று
சொல்லி வந்த நான்,

தமிழால் முடியாதது எதுவும் இல்லை என்று
வசனம் பேசிய நான்,

தாய்மொழிக் கல்வி பற்றி
கட்டுரைகள் எழுதிய நான்,

இப்போதெல்லாம் தமிழைப் பற்றி
வாயே திறப்பதில்லை,

என்று என் பிள்ளையை
ஆங்கில வழிப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தேனோ
அன்றிலிருந்து.

தமிழ் பற்றி பேசுவதற்கு எனக்கும்
ஆசையாய்தான் இருக்கிறது,
யாராவது முகத்தில் காறி துப்பிவிடுவார்களோ என்று
பயமாய் வேறு இருக்கிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...