Monday 9 October 2017

கல்வி நிலையங்கள்

உண்டதை அப்படியே
வாந்தி எடுத்து விட்டால்
நோயின் அறிகுறி என்கிறார்கள்
ஆனால் தேர்வுகளின்போது
இதைத்தானே செய்கிறோம்.

வேலியே பயிரை மேய்வது
காவல் துறையில் மட்டுமல்ல
கல்வித் துறையிலும் தான்.

தமிழ்வழியில் படிப்பது
ஏளனமாகவே பார்க்கப்படுகிறது
தமிழ்த் திருநாட்டில்.

வீட்டுக்கு வீடு வாசற்படி 
என்பதற்குப் பதிலாக
இனிமேல்
வீட்டுக்கு வீடு
என்ஜினியர் எனச் சொல்லலாம்.

மனிதர்களை 
உருவாக்குவதற்குப் பதிலாக
இயந்திரங்களை 
உருவாக்கிக் கொண்டிருக்கின்றன
கல்வி நிலையங்கள்.

வீட்டிற்கொரு 
மரம் வளர்க்கச்சொன்னால் 
என்ஜினியர்களை 
வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...