Saturday 7 October 2017

கவிதைகள்

பெயரைப் பொறிப்பது
பாரம்பரியமாகி விட்டது
தமிழனுக்கு
கல்வெட்டில் தொடங்கியது
கழிவறைக் கதவையும்
விடுவதாக இல்லை

தோற்பது கூட
சந்தோசமாகத்தான் இருக்கிறது
குழந்தைகளுடன் விளையாடும்போது

பிறருடன் மோதி
கஷ்டப்பட்டு 
ஜெயிக்கும்போதுதான் தெரிகிறது
சிறுவயதில்
அப்பாவுடன் விளையாடும்போதெல்லாம்
தான் தோற்று
என்னை எளிதாக 
ஜெயிக்க வைத்திருக்கிறாரென்பது

பேசிக்கொண்டிருக்கும்போது
சிரித்துக்கொண்டே
நீங்க என்ன ஆளுக என்கிறாய்
இதில்
வெட்கமே இல்லாமல்
இப்போதெல்லாம் 
யாருங்க சாதி பாக்குறங்கன்னு
கேள்வி வேற

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...