Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

புண்படுத்தாத வார்த்தைகளாய்
தேடித்தேடி பேசுவதற்குள்
உரையாடல் உயிரிழந்து விடுகிறது

பிறர் மனதை
புண்படுத்தாமல்
எழுதுவதெப்படியென கேட்டால்
எதையுமே எழுதாதே என்கிறான்
நண்பன்

பேசினாலும் 
எழுதினாலும்
யார் மனசாவது
புண்பட்டுவிடுகிறது
என்ன செய்ய

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...