Monday 9 October 2017

துளிப்பாக்கள்

கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்கொண்டு
கொடுக்குமாம்,

பிளாட்பாரத்தில்
இருப்பவர்களுக்கு???

என்ன இருந்தாலும்
இவ்வளவு ஓர வஞ்சனை
இருக்கக்கூடாது
இந்த மழைக்கு

துவாக்குடியில்
பெய்த மழை
திருவெறும்பூரில்
பெய்யாமலேயே
போய்விட்டது..


புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றிக்
கவலை இல்லை
தவறாகப் புரிந்து கொள்பவர்களைப் பற்றித்தான்
வருத்தமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...