Saturday 7 October 2017

கடவுள்

கடவுளைத் திட்டியதற்காக
மனது புண்பட்டு
நட்பு வட்டத்திலிருந்து
விலகிய உறவினர்
இனி அவர் வீட்டு விசேசங்களுக்கு
என்னை அழைக்கமாட்டாரென்றே தோன்றுகிறது

பக்திப் பழமாக
காலையில் அலுவலகம் வருபவர்களை
இரவு ஏழுமணிக்குமேல் பார்க்கும்போது
அது வேற வாய்
இது நாற வாய் என்ற
காமெடிதான் நினைவுக்கு வருகிறது

எந்த மேய்ப்பரையும் நம்புவதற்கு
தயாராக இல்லை ஆடுகள்
கடைசியில் கசாப்புக்கடைதானென்று
தெளிவாகத் தெரிந்துவிட்ட பிறகு

சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதாகச்
சொல்கின்ற கடவுள்கள்
நம்பி வருபவர்களை
கொலை செய்துவிடுகின்றன

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...