Monday 9 October 2017

முகநூல்

முக நூலில் முகங்களுக்குதான் மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறதோ என்ற ஐயம் மனதில் எழுகிறது. 

பிரபலமானவர்களின் கருத்துச்செறிவற்ற பதிவுகள் கூட, ஏன் அவர்களது வெற்று புகைப்படங்கள் கூட பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகிறது,பகிரப்படுகிறது.பிரபலமானவர்களின் பதிவுகள் அனைத்துமே சிறப்பானதாக இருக்கும் என்று நினைப்பதும் ஒருவித மூட நம்பிக்கையே.

ஆனால் அதே சமயத்தில் பிரபலமில்லாத சில முக நூல் நண்பர்களின் பதிவுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தபோதிலும் அது யாராலும் விரும்பப்படுவதோ பகிரப்படுவதோ இல்லை.ஏன் அவர்களது பதிவுகளை நாம் படிப்பது இல்லையா அல்லது தவிர்க்கிறோமா.

பதிவுகள் சிறப்பானதாக இருக்கும்போது அதை விரும்பிகிறோம் எனச் சொல்லமுடியாமல் நம்மைத் தடுப்பது எது, நாம் படித்த நல்ல கருத்துள்ள பதிவுகளை பிறரிடம் பகிர்வதில் தயக்கம் ஏன், பிறரைப் பாராட்டுவதால் நமக்கு ஒன்றும் இழப்பில்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...