Saturday 7 October 2017

தூக்கம்

நான்
இரவில் சீக்கிரம் படுத்து
காலையில் சீக்கிரம்
எழுவேன் என்றால்

ஏன், நீங்கள் 
பேஷ்புக்கிலோ வாட்ஸப்பிலோ இல்லையா
என்கிறார்கள்

எப்படியும்
தூங்க வைத்து விடுகின்றன
சலூன் கடையின்
சுழலும் இருக்கைகள்

எல்லோருக்கும்
வாய்த்து விடுவதில்லை
நல்ல தூக்கம்

படுத்த உடனேயே
தூங்கி விட முடிகிறது
குழந்தைகளால் மட்டும்

இரவில் 
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
தூங்காமல் விழித்திருக்கச் சொன்னால்
சரியென்று ஏற்றுக்கொள்ளும் கண்கள்
காலையில் மட்டும் 
சீக்கிரம் விழியென்று சொன்னால்
சண்டை போடுகிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...