புண்பட்டுவிடுகிறது மனது
சாதியாலும் மதத்தாலும்
கொடுமைகள் நிகழும்போதெல்லாம்
அமைதியாக வேடிக்கைபார்க்கும் மனது
சாதி மதம் வெண்டாமென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
தேரோடு சேர்ந்து
சாமியும் எரிந்து சாம்பலானபோது
போர்வை போர்த்தி தூங்கிய மனது
கடவுள் இல்லையென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
மூடப்பழக்கத்தால்
உயிரையும் உடைமையையும்
இழந்தபோதெல்லாம்
பல்லிளித்துக்கொண்டிருந்த மனது
அதற்கு எதிராக
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
தீண்டாமைக்கொடுமை
நிகழும்போதெல்லாம்
நமக்கென்ன வந்தது என
கவலையற்று திரியும் மனது
அதைப்பற்றி ஏதாவது
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
சாதியாலும் மதத்தாலும்
கொடுமைகள் நிகழும்போதெல்லாம்
அமைதியாக வேடிக்கைபார்க்கும் மனது
சாதி மதம் வெண்டாமென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
தேரோடு சேர்ந்து
சாமியும் எரிந்து சாம்பலானபோது
போர்வை போர்த்தி தூங்கிய மனது
கடவுள் இல்லையென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
மூடப்பழக்கத்தால்
உயிரையும் உடைமையையும்
இழந்தபோதெல்லாம்
பல்லிளித்துக்கொண்டிருந்த மனது
அதற்கு எதிராக
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
தீண்டாமைக்கொடுமை
நிகழும்போதெல்லாம்
நமக்கென்ன வந்தது என
கவலையற்று திரியும் மனது
அதைப்பற்றி ஏதாவது
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது
No comments:
Post a Comment