Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

துவண்ட பொழுதுகளிலெல்லாம்
தோள் தருகிறாய்
நீ தோளனா, தோழனா

அது எப்படி
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு
நாம் சந்திக்கும்போதும்
என்னை
முன்பு அழைத்தது போலவே 
இப்போதும் அழைக்கிறாய்

நான் காணாமல் போவதே
என்னை
தேடுவதற்காகத்தான்

அவ்வப்போது 
நான் காணாமல் போவதே
யாராவது தேட மாட்டார்களா என்ற
நப்பாசையினால்தான்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...