Monday 9 October 2017

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்

என்னை நீ சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
இழிவுபடுத்தாமல் இருந்தால்

தாழ்ந்தவன் என்று சொல்லி ஊருக்கு வெளியே
என்னை ஒதுக்கி வைக்காமல் இருந்தால்

என்னைப் பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு
எனச் சொல்லும் வேதங்களையும் மத நூல்களையும்
கொளுத்துவதாக இருந்தால்

கோவில் கருவறைக்குள்ளே உன்னைப்போல்
நானும் நுழைய முடியும் என்றால்

என்னைவிட நீ உயர்ந்தவன் இல்லை
உன்னைவிட நான் தாழ்ந்தவன் இல்லை என்பதை
நீ ஏற்றுக்கொள்வாய் என்றால்

உன் வீட்டில் நானும் என் வீட்டில் நீயும்
திருமணம் முடிக்க முடியும் என்றால்

நீ மட்டும் அனுபவித்துவரும்
கல்வி.வேலை,பொருளாதார வசதி அனைத்தும்
எனக்கும் கிடைக்கும் என்றால்

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்

இது எதுவும் முடியாது என்றால்

பருப்பும் நெய்யும் மட்டும் தின்று நீ செத்துப்போ
மாட்டுக்கறி தின்று நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...