இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்
என்னை நீ சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
இழிவுபடுத்தாமல் இருந்தால்
தாழ்ந்தவன் என்று சொல்லி ஊருக்கு வெளியே
என்னை ஒதுக்கி வைக்காமல் இருந்தால்
என்னைப் பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு
எனச் சொல்லும் வேதங்களையும் மத நூல்களையும்
கொளுத்துவதாக இருந்தால்
கோவில் கருவறைக்குள்ளே உன்னைப்போல்
நானும் நுழைய முடியும் என்றால்
என்னைவிட நீ உயர்ந்தவன் இல்லை
உன்னைவிட நான் தாழ்ந்தவன் இல்லை என்பதை
நீ ஏற்றுக்கொள்வாய் என்றால்
உன் வீட்டில் நானும் என் வீட்டில் நீயும்
திருமணம் முடிக்க முடியும் என்றால்
நீ மட்டும் அனுபவித்துவரும்
கல்வி.வேலை,பொருளாதார வசதி அனைத்தும்
எனக்கும் கிடைக்கும் என்றால்
இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்
இது எதுவும் முடியாது என்றால்
பருப்பும் நெய்யும் மட்டும் தின்று நீ செத்துப்போ
மாட்டுக்கறி தின்று நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்
என்னை நீ சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
இழிவுபடுத்தாமல் இருந்தால்
தாழ்ந்தவன் என்று சொல்லி ஊருக்கு வெளியே
என்னை ஒதுக்கி வைக்காமல் இருந்தால்
என்னைப் பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு
எனச் சொல்லும் வேதங்களையும் மத நூல்களையும்
கொளுத்துவதாக இருந்தால்
கோவில் கருவறைக்குள்ளே உன்னைப்போல்
நானும் நுழைய முடியும் என்றால்
என்னைவிட நீ உயர்ந்தவன் இல்லை
உன்னைவிட நான் தாழ்ந்தவன் இல்லை என்பதை
நீ ஏற்றுக்கொள்வாய் என்றால்
உன் வீட்டில் நானும் என் வீட்டில் நீயும்
திருமணம் முடிக்க முடியும் என்றால்
நீ மட்டும் அனுபவித்துவரும்
கல்வி.வேலை,பொருளாதார வசதி அனைத்தும்
எனக்கும் கிடைக்கும் என்றால்
இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்
இது எதுவும் முடியாது என்றால்
பருப்பும் நெய்யும் மட்டும் தின்று நீ செத்துப்போ
மாட்டுக்கறி தின்று நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
No comments:
Post a Comment