விண்ணிலிருந்து
தேவன் வருவானென்று
அண்ணாந்து இருந்தபோது
கட்டியிருந்த கோவணத்தையும்
களவாடி விட்டார்கள்
கயமை மதவாதிகள்
பாவிகளை இரட்சிப்பாராம்
ஆண்டவர்
என்ன பாவம் செய்யலாமென்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்
பேய்களின் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
சினிமாக்காரர்கள்
பாவம் கடவுள்
பரிதாபமாக நிற்கிறார்
பார்ப்பதற்கு ஆளின்றி
எல்லோரையும் போலவே
எப்போது கடவுள் வருவாரென
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்
வந்தால்
நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி
கேட்பதற்கு
நான்கு கேள்விகள் இருக்கிறது
என்னிடம்
தேவன் வருவானென்று
அண்ணாந்து இருந்தபோது
கட்டியிருந்த கோவணத்தையும்
களவாடி விட்டார்கள்
கயமை மதவாதிகள்
பாவிகளை இரட்சிப்பாராம்
ஆண்டவர்
என்ன பாவம் செய்யலாமென்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்
பேய்களின் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
சினிமாக்காரர்கள்
பாவம் கடவுள்
பரிதாபமாக நிற்கிறார்
பார்ப்பதற்கு ஆளின்றி
எல்லோரையும் போலவே
எப்போது கடவுள் வருவாரென
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்
வந்தால்
நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி
கேட்பதற்கு
நான்கு கேள்விகள் இருக்கிறது
என்னிடம்
No comments:
Post a Comment