Saturday 7 October 2017

கடவுள்

விண்ணிலிருந்து 
தேவன் வருவானென்று
அண்ணாந்து இருந்தபோது
கட்டியிருந்த கோவணத்தையும்
களவாடி விட்டார்கள்
கயமை மதவாதிகள்

பாவிகளை இரட்சிப்பாராம்
ஆண்டவர்
என்ன பாவம் செய்யலாமென்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

பேய்களின் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
சினிமாக்காரர்கள்
பாவம் கடவுள்
பரிதாபமாக நிற்கிறார்
பார்ப்பதற்கு ஆளின்றி

எல்லோரையும் போலவே
எப்போது கடவுள் வருவாரென
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்
வந்தால்
நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி
கேட்பதற்கு
நான்கு கேள்விகள் இருக்கிறது
என்னிடம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...