Monday 9 October 2017

மரம்

மரம் வெட்டுதல் என்பது 
வெட்டும் மனிதனுக்கும்
வெட்டப்படும் மரத்துக்கும்
இடையேயான நிகழ்வாக மட்டுமே
இருந்ததில்லை எப்போதும்,

அது எப்போதுமே அரசியலோடு
பிண்ணிப் பிணைந்தே கிடக்கிறது
சந்தன மரமாயினும்
செம்மரமாயினும்.

இங்கு,
பார்த்தவுடன் காலில் விழும்
சொரணையற்ற மரங்களும் உண்டு,
நம்மையெல்லாம்
கரையேற்றப் போவதாகச் சொல்லும்
கட்டுமரங்களும் உண்டு,

மரம் வெட்டி கட்சி வளர்த்த
வரலாறுகளும் உண்டு,
வேர்களை இழித்துப்பேசி
உதிர்ந்து போகும்
இலைகளும் உண்டு.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...