அரசு ஊழியர்களிடம் கேட்பதற்கு
கேள்வி ஒன்று இருக்கிறது
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
குற்றமென எழுதியிருக்கிறீர்களே
அது யாருக்காக
பேருந்து நடத்துனரிடம் கேட்பதற்காக
வைத்திருக்கிறேன் கேள்வி ஒன்று
வெளிநாடு சென்றுவிட்டு
பெரியபெட்டிகளோடு வருபவர்கள்
பேருந்தில் ஏறும்போது
எதுவுமே சொல்லாத நீங்கள்
மூட்டை முடிச்சுகளோடு ஏறும்
கிராமத்து மனிதர்களை மட்டும்
திட்டுவது ஏன்
அரசுப்பள்ளி ஆசியர்களிடம் கேட்பதற்கு
கேள்வி ஒன்று இருக்கிறது என்னிடம்
ஆறாயிரம் ஊதியம் வாங்கும்
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களை
அதிக மதிப்பெண்பெறவைக்கும்போது
முப்பதாயிரம் ஊதியம் வாங்கும்
தங்களால் ஏன் முடிவதில்லை
உடன் அமர்ந்து உணவு உண்ணும்
அலுவலக நண்பரிடம்
கேட்பதற்குப் பயந்து
கேட்காமலேயே வைத்திருக்கிறேன்
கேள்வி ஒன்றை
உண்ணும்போதெல்லாம்
உணவைக் கையில்வைத்து
கண்களை இறுகமூடி
கடவுளுக்கு நன்றிசொல்வதுபோல்
மாலைநேரம் வந்ததும்
மதுஅருந்தும் நீங்கள்
கோப்பையை கையில்ஏந்தி
கண்களை இறுகமூடி
கடவுளுக்குச் சொல்வீரா நன்றி
கேள்வி ஒன்று இருக்கிறது
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
குற்றமென எழுதியிருக்கிறீர்களே
அது யாருக்காக
பேருந்து நடத்துனரிடம் கேட்பதற்காக
வைத்திருக்கிறேன் கேள்வி ஒன்று
வெளிநாடு சென்றுவிட்டு
பெரியபெட்டிகளோடு வருபவர்கள்
பேருந்தில் ஏறும்போது
எதுவுமே சொல்லாத நீங்கள்
மூட்டை முடிச்சுகளோடு ஏறும்
கிராமத்து மனிதர்களை மட்டும்
திட்டுவது ஏன்
அரசுப்பள்ளி ஆசியர்களிடம் கேட்பதற்கு
கேள்வி ஒன்று இருக்கிறது என்னிடம்
ஆறாயிரம் ஊதியம் வாங்கும்
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களை
அதிக மதிப்பெண்பெறவைக்கும்போது
முப்பதாயிரம் ஊதியம் வாங்கும்
தங்களால் ஏன் முடிவதில்லை
உடன் அமர்ந்து உணவு உண்ணும்
அலுவலக நண்பரிடம்
கேட்பதற்குப் பயந்து
கேட்காமலேயே வைத்திருக்கிறேன்
கேள்வி ஒன்றை
உண்ணும்போதெல்லாம்
உணவைக் கையில்வைத்து
கண்களை இறுகமூடி
கடவுளுக்கு நன்றிசொல்வதுபோல்
மாலைநேரம் வந்ததும்
மதுஅருந்தும் நீங்கள்
கோப்பையை கையில்ஏந்தி
கண்களை இறுகமூடி
கடவுளுக்குச் சொல்வீரா நன்றி
No comments:
Post a Comment