Saturday 7 October 2017

மழை

காலையிலேயே வந்தால்
லீவு விடுவார்கள் பள்ளிக்கு
மாலையில் மட்டுமே
வருகிறதென்று
மழை மீது கோபம்
என் மகளுக்கு

கண்மாய் குளத்தையெல்லாம் தூர்த்துக்
கட்டிடங்கள் கட்டிவிட்டு
மழைநீரைச் சேகரிக்கச்சொல்லி
பிரச்சாரம் செய்கிறார்கள்

வியர்வையில் நனைவதற்கு
சம்மதிக்கும் மனது
மழையில் நனைய மட்டும்
ஏனோ மறுக்கிறது

மழைபெய்வது 
எனக்கு மிகவும் பிடிக்கிறது
நான் வீட்டிலிருக்கும்போது

ஏமாற்றத்தோடேயே
ஓடிக்கொண்டிருக்கிறது
வீட்டுவாசலில் மழைநீர்
காகிதக்கப்பல் செய்துவிட
யாருமே இல்லாததால்

என்னை நனைப்பதில்
என்ன ஆனந்தமோ தெரியவில்லை மழைக்கு
குடை எடுத்துச்செல்லும் நாளில்
பெய்வதே இல்லை

மண்ணை மட்டுமல்ல
மனதையும் குளிரவைத்துவிடுகிறது
மழை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...