Monday 9 October 2017

மனைவி

அம்மாவையும்
மகளையும்
கொண்டடுவதைப் போல்
மனைவியைக் கொண்டாடுவதில்லை
யாரும்.

வழிகாட்டும் 
கலங்கரை விளக்கமாக 
இருக்கும் நீ தான்
இருள் நீக்கும்
மெழுகுவர்த்தியாகவும் இருக்கிறாய்.

சாய்ந்து கொள்ள
உன் தோள்கள்
இருப்பதால்தான்
நான் இன்னும்
சாயாமல் இருக்கிறேன்.

தூக்கிவிடுவதற்கு
நீ இருப்பதால்தான்
எத்தனை முறை 
விழுந்தாலும்
எழுந்துவிடுகிறேன்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...