Saturday 7 October 2017

கவிதைகள்

நான் கருப்பாயிருப்பதற்காக
கவலைப்படுபவர்கள்
அழகு சாதான தயாரிப்பாளர்கள் தான்
என்னையும்
சிவப்பாக்காமல் விட மாட்டார்கள்
போலிருக்கிறது

ரெம்பத்தான் திமிர்
இந்த காற்றுக்கு
எப்போதும் 
நான் தான் போய்
நிற்க வேண்டியிருக்கிறது
மொட்டை மாடியில் அதற்காக
ஒரு போதும் வந்ததில்லை
வீட்டிற்குள்
எனைப் பார்க்க

எனது எழுத்துக்கள்
என்னைப் போன்ற
சாமானியர்களுக்கானது
நல்ல வேளையாக
எந்த அறிவுஜீவியுமே
அதைப் படிப்பதில்லை

கலகலப்பாகப் பேசத் தெரியாத
நான் எழுதுவதையும் பேசி
பேச்சுப்போட்டிகளில்
வாங்கி விடுகிறார்கள்
ஏதோ ஒரு பரிசு

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...