Monday 9 October 2017

கவிதைகள்

அர்ச்சகனுக்கு பிச்சை போட்டு 
வெளியே வந்தவன்
பிச்சை கேட்கும் 
வயதான பாட்டியிடம் சொல்கிறான்
ஒழச்சு பொழைக்க வேண்டியதுதானே என்று.

மிதிவண்டியில் 
தேநீர் விற்பவரிடம்
சரியான சில்லறையைக் 
கேட்டுப் பெறும் பலரும்
மதுக்கடைகளில்
திருப்பித் தரப்படாத 
சில்லறையைப் பற்றி 
கவலைப் படுவதே இல்லை.

குழந்தைகளின் அறியாமையை மட்டுமல்ல
வயதானவர்களின் அறியாமையையும்
என்னால் ரசிக்க முடிகிறது

பேருந்து நிலையத்தில்
பெரியார் புத்தக நிலையத்திற்கு வந்த
பெரியவர் ஒருவர்
பஞ்சாங்க புத்தகம் இருக்கா என்று கேட்ட போது.

இந்த பேருந்து நிலையங்கள்
எப்போது பார்த்தாலும்
ஏதாவது ஒரு குடிகாரனைத்
தன் மடியில் போட்டுத்
தூங்கவைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...