Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

அனைத்து சாதியினரும்
அர்ச்சகராக முடியாது
இது
இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறான்னு
கேட்கிறவனுக்கெல்லாம்
நீதிமன்றம் கொடுத்த செருப்படி

காஞ்சி தேவநாதப் பார்ப்பான்
செய்த செயலெல்லாம்
ஆகமவிதிப்படிதானென்றால்
நமக்கு அந்த
கேடுகெட்ட ஆகமவிதியும் வேண்டாம்
அதை வேடிக்கை பார்த்த
மானம் கெட்ட சாமியும் வேண்டாம்
மண்ணாங்கட்டி கோவிலும் வேண்டாம்

பார்ப்பனன் மட்டும் உள்ளேயாம்
நாமெல்லாம் வெளியேதானாம்
இனியும் செல்லத்தான் வேண்டுமா
கோவிலுக்கு

நாமெல்லாம் 
தீண்டத்தகாதவர்களென்று
உரக்கச்சொல்லிவிட்டது
உயர்நீதிமன்றம்

ஐன்ஸ்டின் விதி, நியூட்டன் விதி
தெரிந்தவர்களை விட
ஆகம விதி தெரிந்தவன்
இங்கு உயர்ந்தவனாகி விட்டான்
என்ன ஒரு வெட்கக்கேடு


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...