தந்தைப் பெரியார்
பெரியார் நமக்கு மிகவும் பிடித்த முரட்டுக்குழந்தை, நமக்குப் பிடித்த குழந்தை என்பதற்காக நாம் மட்டுமே கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்,அந்த குழந்தையை கொஞ்சம் கிழே இறக்கி விடுங்கள் அது நடக்கட்டும் மற்றவர்களிடமும் அந்த குழந்தையை அறிமுகப்படுத்துங்கள்.
பெரியாரைப் புகழ்வது தான் நமது பணியா,அவரைப் பற்றி புகழ்வது அவருக்கே பிடிக்காதே.நாம் என்ன அவரது பாதுகாவலர்களா அவரைக் காப்பாற்ற, அவரைக் காத்துக்கொள்ள அவரால் முடியும்.
பெரியார் வேண்டுவது பாதுகாவலர்களை அல்ல, கொள்கைகளை பரப்பும் போராளிகளைத்தான்.
முகநூலில் சண்டை போடும் அட்டைக்கத்தி வீரர்களுடன் போராடுவது நமது வேலை அல்ல.
பெரியார் படத்தின் மீது சிறுநீர் கழிப்பதும் செருப்பால் அடிப்பதும் நமது இனத்தின் எதிரி அல்லவே, நமது சகோதரனும் சகோதரியும் தானே. அப்படியானால் நமது எதிரி அவனுடைய வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கின்றான் என்பதுதானே அதன் பொருள்.
பெரியாரைப் பற்றிய தவறான புரிதலை, எதிர்மறையான எண்ணத்தை, நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்க்க நமது எதிரிகளால் முடியும் போது, அவரது கொள்கைகளை, அவரது கருத்துக்களை, அவரைப் பற்றிய சரியான புரிதலை, அவரைப் பற்றிய நேர்மறையான எண்ணத்தை நமது சகோதர சகோதரிகளிடம் நம்மால் கொண்டு போய் சேர்க்க முடியாமல் போனது ஏன்?
எனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ஒரு ஓட்டுப் பொறுக்கி கட்சியின் கூட்டம் நடக்கிறது,கொள்கை இல்லாதவன் எல்லாம் கொள்கை பற்றி பேசுகிறான்.ஆனால் பெரியாரியல் கூட்டங்கள் எதுவுமே நடைபெறுவது இல்லையே ஏன்? நாம் எல்லோரிடமும் பெரியாரைக் கொண்டுபோய் சேர்த்து விட்டோமா?
நான் எனது அலுவலக நண்பருடன் பெரியாரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் பெரியார் இவ்வளவு செய்துள்ளாரா? அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்பது மட்டும் தான் தெரியும் என்றார், படித்த அவரே இப்படி என்றால் படிக்காதவர்கள்?இவ்வளவு காலமாக அந்த நண்பரிடம் பெரியாரைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாமல் இருந்தது என் குற்றம் தானே.
பெரியார் பற்றிய சரியான புரிதலை நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்ப்போம்,இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் தந்தைப் பெரியாரை அறிமுகம் செய்து வைப்போம்.
பெரியார் நமக்கு மிகவும் பிடித்த முரட்டுக்குழந்தை, நமக்குப் பிடித்த குழந்தை என்பதற்காக நாம் மட்டுமே கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்,அந்த குழந்தையை கொஞ்சம் கிழே இறக்கி விடுங்கள் அது நடக்கட்டும் மற்றவர்களிடமும் அந்த குழந்தையை அறிமுகப்படுத்துங்கள்.
பெரியாரைப் புகழ்வது தான் நமது பணியா,அவரைப் பற்றி புகழ்வது அவருக்கே பிடிக்காதே.நாம் என்ன அவரது பாதுகாவலர்களா அவரைக் காப்பாற்ற, அவரைக் காத்துக்கொள்ள அவரால் முடியும்.
பெரியார் வேண்டுவது பாதுகாவலர்களை அல்ல, கொள்கைகளை பரப்பும் போராளிகளைத்தான்.
முகநூலில் சண்டை போடும் அட்டைக்கத்தி வீரர்களுடன் போராடுவது நமது வேலை அல்ல.
பெரியார் படத்தின் மீது சிறுநீர் கழிப்பதும் செருப்பால் அடிப்பதும் நமது இனத்தின் எதிரி அல்லவே, நமது சகோதரனும் சகோதரியும் தானே. அப்படியானால் நமது எதிரி அவனுடைய வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கின்றான் என்பதுதானே அதன் பொருள்.
பெரியாரைப் பற்றிய தவறான புரிதலை, எதிர்மறையான எண்ணத்தை, நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்க்க நமது எதிரிகளால் முடியும் போது, அவரது கொள்கைகளை, அவரது கருத்துக்களை, அவரைப் பற்றிய சரியான புரிதலை, அவரைப் பற்றிய நேர்மறையான எண்ணத்தை நமது சகோதர சகோதரிகளிடம் நம்மால் கொண்டு போய் சேர்க்க முடியாமல் போனது ஏன்?
எனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ஒரு ஓட்டுப் பொறுக்கி கட்சியின் கூட்டம் நடக்கிறது,கொள்கை இல்லாதவன் எல்லாம் கொள்கை பற்றி பேசுகிறான்.ஆனால் பெரியாரியல் கூட்டங்கள் எதுவுமே நடைபெறுவது இல்லையே ஏன்? நாம் எல்லோரிடமும் பெரியாரைக் கொண்டுபோய் சேர்த்து விட்டோமா?
நான் எனது அலுவலக நண்பருடன் பெரியாரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் பெரியார் இவ்வளவு செய்துள்ளாரா? அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்பது மட்டும் தான் தெரியும் என்றார், படித்த அவரே இப்படி என்றால் படிக்காதவர்கள்?இவ்வளவு காலமாக அந்த நண்பரிடம் பெரியாரைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாமல் இருந்தது என் குற்றம் தானே.
பெரியார் பற்றிய சரியான புரிதலை நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்ப்போம்,இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் தந்தைப் பெரியாரை அறிமுகம் செய்து வைப்போம்.
No comments:
Post a Comment