Monday 9 October 2017

இளையராஜா

மனக்காயங்களை ஆற்றும் 
மருந்தாகவும்
தூக்கம் வருவிக்கும்
தாலாட்டாகவும்
மனதை வருடும்
மயிலிறகாகவும்
இருக்கின்றன
இளையராஜாவின் பாடல்கள்.

ஒன் டு ஒன் லாம்
பார்ப்பது இல்லை
இளையராஜா பாடல் ஒலித்தால்
ஏறி விடுவேன்
கட்டை வண்டி என்றாலும்.

நல்லவேளை
நமக்கெல்லாம்
இளையராஜா இருக்கிறார்
பாவம் நம் பிள்ளைகள்
அவர்களுக்கு
வெறும்
டங்கா மாரி ஊதாரி
புட்டுகிட்ட நீ நாறி
மட்டும் தான்.

வேலைக்குச் செல்லும்போது
பேருந்துகளில் ஒலிக்கும்
இளையராஜாவின் பாடல்களே
போதுமானதாக இருக்கிறது
அன்றைய பொழுதிற்கு.

இசையைப் பற்றி
உனக்கெல்லாம் என்ன தெரியுமென்று
ஏளனமாய் கேட்டார்கள்
எனக்கு இளையராஜாவைத் தெரியுமென்றேன்
திமிராக.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...