மனக்காயங்களை ஆற்றும்
மருந்தாகவும்
தூக்கம் வருவிக்கும்
தாலாட்டாகவும்
மனதை வருடும்
மயிலிறகாகவும்
இருக்கின்றன
இளையராஜாவின் பாடல்கள்.
ஒன் டு ஒன் லாம்
பார்ப்பது இல்லை
இளையராஜா பாடல் ஒலித்தால்
ஏறி விடுவேன்
கட்டை வண்டி என்றாலும்.
மருந்தாகவும்
தூக்கம் வருவிக்கும்
தாலாட்டாகவும்
மனதை வருடும்
மயிலிறகாகவும்
இருக்கின்றன
இளையராஜாவின் பாடல்கள்.
ஒன் டு ஒன் லாம்
பார்ப்பது இல்லை
இளையராஜா பாடல் ஒலித்தால்
ஏறி விடுவேன்
கட்டை வண்டி என்றாலும்.
நல்லவேளை
நமக்கெல்லாம்
இளையராஜா இருக்கிறார்
பாவம் நம் பிள்ளைகள்
அவர்களுக்கு
வெறும்
டங்கா மாரி ஊதாரி
புட்டுகிட்ட நீ நாறி
மட்டும் தான்.
நமக்கெல்லாம்
இளையராஜா இருக்கிறார்
பாவம் நம் பிள்ளைகள்
அவர்களுக்கு
வெறும்
டங்கா மாரி ஊதாரி
புட்டுகிட்ட நீ நாறி
மட்டும் தான்.
வேலைக்குச் செல்லும்போது
பேருந்துகளில் ஒலிக்கும்
இளையராஜாவின் பாடல்களே
போதுமானதாக இருக்கிறது
அன்றைய பொழுதிற்கு.
பேருந்துகளில் ஒலிக்கும்
இளையராஜாவின் பாடல்களே
போதுமானதாக இருக்கிறது
அன்றைய பொழுதிற்கு.
இசையைப் பற்றி
உனக்கெல்லாம் என்ன தெரியுமென்று
ஏளனமாய் கேட்டார்கள்
எனக்கு இளையராஜாவைத் தெரியுமென்றேன்
திமிராக.
உனக்கெல்லாம் என்ன தெரியுமென்று
ஏளனமாய் கேட்டார்கள்
எனக்கு இளையராஜாவைத் தெரியுமென்றேன்
திமிராக.
No comments:
Post a Comment