Monday 9 October 2017

பாழாய்ப் போன மனது

பாழாய்ப் போன மனது

முகநூலைத் திறந்ததுமே,

நாம் இட்ட பதிவுகளை 
யாரவது விரும்பியிருக்கிறார்களாவென்று
பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறது.

யாருமே விரும்பவில்லையென்றால்,

கோபப்படுகிறது
மகிழ்ச்சியைத் தொலைக்கிறது

அமைதியை இழக்கிறது
தூங்கமுடியாமல் தவிக்கிறது.

யாருக்குமே அறிவில்லையென்று
எல்லோரையும் திட்டித் தீர்க்கிறது.

அறிவுகெட்ட இந்த சமுதாயம்
நாசமாக போகட்டுமென்று
சத்தமாக சாபமிடுகிறது.

இறுதியாக,
தன்னைத் தானே ஆற்றிக்கொண்டு
மீண்டும் பதிவிடத் தொடங்குகிறது
எதையாவது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...