குழந்தைகளின்
அப்பாவுடனான இருத்தல் எல்லாம்
அம்மாவைக் காணும் வரைதான்.
குழந்தைகளின்
சேட்டையை மட்டுமல்ல
அவர்களின் அமைதியையும்
தாங்க முடிவதில்லை.
தண்ணீரில் விளையாடுவதில்
என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை
இந்த குழந்தைகளுக்கு,
எதை எடுத்தாலும் தண்ணீரில்
போட வேண்டும் என்பதையும்
யார்தான் சொல்லிக்கொடுத்தர்களோ
அதுவும் தெரியவில்லை.
பேசுகின்ற மனிதர்கள் எல்லாம்
பேசாமல் இருக்க,
பேச இயலாத விலங்குகள் எல்லாம்
பேசிக்கொண்டிருக்கின்றன
குழந்தைகளுடன்
கார்ட்டூன்களில்.
அப்பாவுடனான இருத்தல் எல்லாம்
அம்மாவைக் காணும் வரைதான்.
குழந்தைகளின்
சேட்டையை மட்டுமல்ல
அவர்களின் அமைதியையும்
தாங்க முடிவதில்லை.
தண்ணீரில் விளையாடுவதில்
என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை
இந்த குழந்தைகளுக்கு,
எதை எடுத்தாலும் தண்ணீரில்
போட வேண்டும் என்பதையும்
யார்தான் சொல்லிக்கொடுத்தர்களோ
அதுவும் தெரியவில்லை.
பேசுகின்ற மனிதர்கள் எல்லாம்
பேசாமல் இருக்க,
பேச இயலாத விலங்குகள் எல்லாம்
பேசிக்கொண்டிருக்கின்றன
குழந்தைகளுடன்
கார்ட்டூன்களில்.
No comments:
Post a Comment