Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

பல்லி விழுந்து
பாழானது
பால்

என்னோடு 
நீ இருக்கும் காலமெல்லாம்
வசந்த காலம்
நீ பிரிந்தால் கோடைகாலம்
என் கண்களுக்கு மட்டும் அது
கார்காலம்.

எனக்கு நீ குறிஞ்சி
நீ இல்லை என்றால்
நான் பாலை

உயிருக்கே 
உலை வைக்கும்
அணு உலை

வீட்டில் 
உலை கொதிக்க
உழை

பார்ப்பான் செய்த
சதி
சாதி

நாள்தோறும் 
படுகொலைகள்
தலைநகரமா? கொலைநகரமா?

பள்ளிகளில்
பாலியல் தொல்லை
கல்விச்சாலையா? கலவிச்சாலையா?

பெய்தும் கொல்கிறது
பொய்த்தும் கொல்கிறது
மழையா? பிழையா?

திரைப்படம் நெடுகிலும்
ஆபாசம்
கலையா? களையா?

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...