Saturday 21 October 2017

ஒலக நாயகனுக்கு ஒரு கடுதாசி


ஒலக நாயகனுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
ரெம்ப நாளாவே ஒங்களுக்கு ஒரு கடுதாசி எழுதணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா ஒவ்வொரு தடவ எழுதணும்னு நெனக்கும்போதும் வார்த்த வந்து முட்டிரும்(ஒங்களுக்கு மாதிரியே), இந்த தடவதான் முட்டமா வரிசயா வருது அதனால எழுதுறேன்.
நா படிக்கிறப்ப ஒங்களோட பெரிய ரசிகனா இருந்தேன், ஒங்க படத்த மட்டுந்தான் பாப்பேன், வேற எந்த படத்தயும் பாக்க மாட்டேன். ஒலக சினிமாவுலேயே நீங்க ஒருத்தர் தான் அறிவாளின்னு அப்ப நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஒங்கள பத்தி யாராவது தப்பா பேசுனா பயங்கரமா கோவம் வரும் என்னடா இது இப்படிப்பட்ட அறிவாளியப் போயி எல்லாரும் தப்பா பேசுறாங்களேன்னு அவங்களோட சண்டைக்குப் போவேன்.அப்பவே நா எங்கூட்டாளிங்க கிட்டல்லாம் சொல்லுவேன் நீங்க உள்ளூர் நாயகன் இல்ல ஒலக நாயகன் அப்படின்னு.
பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதன்னு நீங்க பாடுனப்போ ஒங்கள மூட நம்பிக்கய ஒழிக்க வந்த புரட்சி வீரன்னு நெனச்சு சந்தோசப்பட்டேன், ஒங்கள நீங்க பகுத்தறிவு வாதியா, கடவுள் மறுப்பாளனா, முற்போக்குவாதியா காமிச்சிகிட்டப்ப ஒங்கள தல மேல தூக்கிவச்சு கொண்டாடுனேன்.
கருப்பு சட்ட மாட்டிக்கிட்டு அக்ரகாரத்தில இருந்து பெரியார் திடல் வர்றதுக்கு இவ்வளவு காலம் ஆச்சுன்னு நீங்க சொன்னப்ப நா புல்லரிச்சு போயிட்டேன்.
ஆனா இப்பதான் நீங்க யாருங்கிறத நா முழுசா புரிஞ்சுக்கிட்டேன். கடவுள் பாதி மிருகம் பாதின்னு சொல்ற மாதிரி, நீங்க எல்லாத்துலயுமே பாதி தான் எதுலயுமே முழுசு இல்ல,
மாநிலத்துல சிஸ்டம் சரியில்லன்னு சொல்றீங்க மத்தியில உள்ள சிஸ்டத்த பத்தி பேசவே மாட்டேங்கறீங்க,சினிமாவுக்கு வரி போட்டா பொங்குறீங்க எங்களுக்கு வரி போட்டா பம்முறீங்க.
ரெண்டு நாளைக்கு முன்னால நிலவேம்பு கஷாயத்துல ஒண்ணுமே இல்ல அப்படீன்னு சொன்னீங்க, இப்ப நா அப்படி சொல்லல இப்படி சொன்னேன்னு சொல்றீங்க.
கேக்குற கேள்விக்கு தெளிவா பதில் சொல்லாம கொழப்பிவிட்டு கேள்வி கேக்குறவுங்களயே சரியாத்தான் கேக்குறமான்னு பீல் பண்ண விட்டுறீங்க (வடிவேல் காமெடி மாதிரி).
நா படிக்காததுனால நீட்ட பத்தி தெரியாது என் மகளுக்கு டெங்கு வந்ததால அதப்பத்தி தெரியும்னு சொல்றீங்க என்ன ஒரு சிந்தனை. அனிதா மரணத்த பத்தி பேசுற நீங்க, நீட்ட பத்தியோ, சமூகநீதி பத்தியோ இடஒதுக்கீடு பத்தியோ பேச மாட்டேங்கிறீங்க.
இந்தி சமஸ்கிருத திணிப்ப பத்தி வாயவே தெறக்க மாட்டேங்கிறீங்க. சேரி கல்ச்சர் பத்தி கேட்டா அது தப்புன்னு சொல்லாம இப்ப எங்க சாதி இல்ல அப்படின்னு கொதிக்கிறீங்க.
நீங்க போட்டுக்கிட்டு இருக்கிறதா சொன்ன கருப்பு சட்ட காவியா மாறி ரொம்ப காலம் ஆயிடுச்சு, நீங்க என்னதான் மறச்சாலும் ஒங்க குடுமி வெளிய தெரிய ஆரம்பிச்சிடுச்சு. நீங்க எங்களுக்கு எதிரியாவே இருந்துட்டு போங்க நண்பனா நடிக்காதீங்க.
இதோட இந்த கடுதாசிய நிப்பாட்டிக்கிறேன் தேவப்பட்டா மறுபடியும் எழுதுறேன்.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...