Monday 9 October 2017

பேருந்து

நகரப் பேருந்தில்
ஏறினேன் நானும்,
பழுதாகி நின்றது
பாதியிலே,
அந்த நகரப் பேருந்து
இப்போது நகராப் பேருந்து.

எதையுமே ரசிக்கவும் விடுவதில்லை
யோசிக்கவும் விடுவதில்லை
தூங்கவும் விடுவதில்லை
நடத்துனர் திருப்பித் தருவதாகச் சொன்ன
சில்லறை பாக்கி

நீண்ட தூரப் பயணங்களில் 
நமது அருகில்
ஒரு ஒல்லியானவர் வந்து 
அமர்ந்து விட வேண்டுமென்று
எப்போதுமே எதிர்பார்க்கிறது
இந்த பாழாய்ப்போன மனது.

அரசுப் பேருந்து
பழுதாகி நின்றது
தள்ளுங்கள் நகருமென்றனர்
"அரசு" என்றாலே
"தள்ளினால்" தான் நகரும் போல.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...