Saturday 7 October 2017

கவிதைகள்

எல்லோருமே 
வாடிவிடுவதில்லை
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்

அப்பாவிடம் 
செலவுக்குப் பணம் வாங்கும்
இளைஞர்கள் தான்
தயங்காமல் பிச்சை போடுகிறார்கள்

ஏனென்றால்
அவர்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது
மற்றவர்களிடமிருந்து
காசு கிடைப்பது
எவ்வளவு கடினமானதென்பது


போடும் பதிவிற்கு
நாலு பேராவது
லைக் போடுகிறார்கள்
யாராவது ஒருவர்
ரசிகர் மன்றம்
ஆரம்பிக்க மாட்டாரா என்ற
பேராசையில் இருக்கிறேன் நான்


முகநூலில்
இருநூறு பேரை
நண்பர்களாகச்
சேர்த்த எனக்கு
இன்னும்
பக்கத்து வீட்டுக்காரரை மட்டும்
நண்பராக்கத் தெரியவில்லை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...