Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

கண்டுகொள்வதே இல்லை என்ற
ஆதங்கத்தோடும்
கண்டுகொள்ள மாட்டார்களா என்ற
எதிர்பார்ப்போடும்
கண்டுகொள்பவர்களை கண்டுகொள்ளாத
அலட்சியத்தோடும்
கடந்து போகிறேன் நான்

மேலே ஏறு, மேலே ஏறு
முன்னே போ, முன்னே போ என்ற
நம்பிக்கை வார்த்தைகளை
சொல்லிக்கொண்டே வருகிறார் நடத்துனர்
நாள்தோறும் பேருந்தில்

குழந்தைகளின் கைப்பிடித்து
நெடுஞ்சாலை கடந்துவிட்டால்
எதையோ சாதித்ததுபோல்
எண்ணம் வருகிறது

கூடவே இருந்த நண்பர்களைத்
தொலைத்துவிட்டு
முகநூலில் தேடுகிறேன்
புதிய நட்புகளை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...